புதன், 1 டிசம்பர், 2010

மொழியும் உடலும்


                  

                     மொழி ஒரு சமூகத்தின் பண்பாட்டை கலாசாரத்தை தலைமுறைகள் தோறும் சுமந்து செல்லும் அற்புதமான வாகனம். அதற்கு வழி வகுக்காவிட்டால் நாம் காலங்களாக நம் பருவ நிலைக்கேற்ப ஆரோக்கியமாக  வாழ்ந்து வந்ததின் பயன் இல்லாமல் போய்விடும் .இங்கு ஒன்று சொல்ல வேண்டியிருக்கிறது ஆரோக்கியம் என்ற வார்த்தை மேற்கத்திய பொருளில் வரும் வெறும் உடலின் நோயற்ற நிலை  மட்டும் அல்ல. முழுமையான ஒரு வாழ்நிலையை  குறிக்கிறது, 
                        
மன அமைதியுடன், வளமார்ந்த சிந்தனைகளுடன்,பகுத்தறிவு செயல்களுடன் இனிய சொற்களுடன், நோயற்ற தேகத்துடன் ,செழுமையான சமூக பொறுப்புடன், இயற்கையை அறிந்து மதித்து அதற்கிணங்கி வாழ்வதற்கு தான் ஆரோக்கியம் என்று பொருள். இதை கடைபிடிக்க வேண்டி நம் முன்னோர்கள் எத்தனையோ பேர் ரிஷிகளாக முனிவர்களாக வாழ்ந்து உணர்ந்து நமக்கு அந்த ஓங்கிய அறிவை தந்துள்ளனர். மேற்கத்திய நாடுகளில் வெளி உலக அறிவியலில் எத்தனை ஆழமாக ஈடுப்பட்டு பல உண்மைகளையும் பயனுள்ள பல பொருட்களையும் கண்டுபிடிக்கிறார்கள். 



  அதை போலவே ,நம் முன்னோர்களில் உள்ளுலகை அதாவது மனிதனின் செயல்களுக்கும் குணங்களுக்கும் ஆதாரமான மனதையும் அதை தாண்டியும் ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் தான் ரிஷிகளும் முனிவர்களும். அவர்களின் ஏராளமான கண்டுபிடிப்புகள் இன்று மேற்கத்திய உலகமே எடுத்து பயன்ப்படுத்திக்கொண்டிருக்கிறது. உதாரணம்.  1 .  பதஞ்சலி முனிவரின் யோகா சாஸ்திரங்கள்  , 
2 .   அகத்தியனில் இருந்தும் தொடங்கி நூற்றுகணக்கான முனிவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கைக்குள் ஒளிந்திருக்கும் பல பல அற்புதமான மூலிகைகளையும் தியான முறைகளையும் உட்கொண்ட ஆயுர் வேதா( ஆயுர் = வாழ்க்கை ,வேதா = அறிவு ) மற்றும் சித்த( புலன்களால் அறிய முடியாத அதிநுட்பம் ) வேதா ஆகியவை .



                        மட்டுமல்ல ஒரு மொழி ஒரு சமூகத்தில் உருவாகுவது  அந்த சமூகம் வாழும் தட்ப வெட்ப நிலையை பொறுத்து தான் . அங்கு உற்பத்தியாகும் தானியங்கள் காய் கறிகள் ,பழங்கள் போன்றவையால் அந்த சமூகத்தில் வாழும் மனிதனின்  உடல் எப்படி அமைக்கப்படுகிறதோ  அதற்கேற்ப  அவனின் ஒலி வெளி வரும் விதமும் அமைகிறது. இங்கு அவனின் குரல் கற்றை  ,மூளையின் அமைப்பு ,பற்களின் அமைப்பு, தாடி எலும்பின் அமைப்பு ,மூக்கின் அமைப்பு எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டே அமைகிறது. இங்கிருந்து தான் ஒவ்வொரு பகுதி மக்களின் குரலும் ,இசையும் மாறுப்படுகிறது,  (பனி மனிதனின் இசை தான் மொழி தான் சிறந்தது என்று துள்ளும் ஒரு சில அற்பங்கள் நம்மூரில் எழுத்தாளர்களாக இருந்து வருவதை நினைக்கும்போது வேதனை தான் .  விஞ்ஞான ரீதியாக நம் வாழ் முறையை அணுகாத இவர்களை பார்த்தால் ஐயோ பாவம்  என்று தான் சொல்ல வேண்டும் .) இதனால் தான் மனோ தத்துவ நிபுணர்கள் குழந்தைகளுக்கு மன அழுத்தமோ நரம்பு தளர்ச்சியோ தீவிர உணர்சிகளோ வராமல் இருக்க தாய் மொழி கல்வி தான் சிறந்தது என்கிறார்கள் . ஒரு மனிதனின் வளர்ச்சியை கூட அவனின் தாய் மொழி எப்படி கட்டுப்படுத்துகிறது பாருங்கள்.   



                       இதையெல்லாம் சுமந்து வரும் நம் மொழியை நாம் பேசி பயன்படுத்தவில்லை என்றால் நாம் இழக்க போவது அருமையான ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை தான். நம் மொழி உடல் ,மன   ரீதியான வளர்ச்சிக்கு மற்று மொழியினருக்கு எப்படி பயன் இல்லையோ அப்படியே தான் அவர்களின் மொழியும் நம் செழிப்பான வாழ்க்கைக்கு சிறந்ததல்ல. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான மொழியும் தளமும் இருக்கிறது. ஆனால் வாழுவதை பற்றி தெரியாமலேயே அல்லது முரண்ப்பட்ட கருத்துக்களுடன் இருப்பதால் மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே  வருகிறது .

                   .. இதற்காக எத்தனை மாத்திரைகள் எடுத்தாலும் பயனில்லை. மேற்கத்திய மருத்துவ உலகமே இதற்கான மருந்து, தியான முறைகளும் யோகாவும் தான் என்று உறுதிப்படுத்தி விட்டனர். இந்த அற்புதமான வாழ்முறைகள் இருப்பது நம் மொழியில் தான். பாருங்களேன் எத்தனை நூற்றாண்டுகளாக நம் முன்னோர்கள் மொழியுடன் கலர்ந்த இதை (கலாசாரம் என்ற பெயரில் அல்லது பண்பாடு  என்ற பெயரில்)எடுத்து வந்திருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கும் இன்னும் வரும் அத்தனை தலைமுறைகளுக்கும்  இதை பத்திரமாக எடுத்து செல்லவேண்டியது தான் நம் கடமை. மொழி எவ்வளவு முக்கியமானது பார்த்தீர்களா.. .. தாய் மொழி கண்ணல்ல உயிரே தான் ..........