வெள்ளி, 11 ஜூன், 2010

இந்திய இசையை இறுக்கும் பூணூல்கள் ?

         
                                  இசை பலக்காலங்களிலாக பல்வேறு ஆய்வுகளுக்கும் புதுமைகளுக்கும் உள்ளாகி வாழ்ந்தும்   வளர்ந்தும் கொண்டிருந்தது,   இந்திய இசையில் பதினெட்டாம் நூற்றாண்டு வரை புதுமைகள் என்பது  ராகங்களில் இழைச்சேர்க்கப்பட்ட காதலாகவும் பக்தியாகவும் தத்துவங்களாகவும் இருந்தன. பல பல வட்டார மொழிகளின் வழியாக நாட்டுப்புற மக்களின் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வடிகாலாகவும், தூது அனுப்பும் முறையாகவும், மன சோர்வுக்கான  மருந்தாகவும் மகிழ்ச்சியின் ஊடகமாகவும் இசை இருந்தது. அப்பொழுதும் இதில் ராகங்களின் தன்மையும் பாவங்களின் நிறைவும் ஒன்றுக்கொன்று போட்டிப்போடும் விதம் அமைந்திருந்தது குறிப்பாக சொல்ல வேண்டிய ஒன்று. இன்று இசையில் ஹார்மொனைசிங் திறன் அதிகமாக சேர்ந்திருக்கும் வாய்ப்புண்டு. 

                             அன்றைய  இசை இன்றைய இசை என்ற ஒன்றில்லை, கிழக்கத்திய இசை பாணி அதிகவும்   சோலோ (solo ). அதாவது single frequency யை சார்ந்ததாகவும் மேற்கத்திய இசை அதிகவும் ஹார்மொனி வகையை சார்ந்ததாகவும் காணப்படுகிறது,.  மேற்கத்திய இசை கலைஞனின்  திறமை ,அவர் அதை அமைப்பதால் மட்டுமல்ல ஒரு கூட்டு முயற்சியின் ,முக்கியமாக ,இசை கருவிகளின் ஒருங்கிணைந்த இசை வடிவத்தை அமைத்தல் என்பதாலும் வித்தியாசப்படுகிறது . சுருதி சேர  பல வித இசை கருவிகளின் ஒன்று சேர்ந்த ஒலித்தல் . மொசார்ட் பீதோவன் ,விவால்டி , வ்லாடிமேர் ஹோரோவிஸ் ,யுபி  ப்ளேக் போன்ற பியானோ கலைஞர்கள் ஆகட்டும் அல்லது ராப் ,போப் ரக இசை மேதைகளாகட்டும், ஹார்மொனைசிங் வகையில் தான் வருகிறார்கள் . அவர்களின் இசையின் புரிதல்கள் இங்கிருந்து தான் தொடங்குகிறது. 
                                    

                              ஆசிய பகுதிகளிலும் மற்றும் இத்தகைய இசை வேரோட்டம் மிக அரிதாக தான் காணப் படுகிறது. காமேலன் என்ற இந்தோனேசியன் இசையில் பல்வேறு கருவிகளை அதிகமாக பயன்படுத்தி இசைப்பதுண்டு. இதற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு.இந்திய இசை மேதைகளான ஹரி பிரசாத் சௌரசிய ,சாகிர் ஹுசைன் ,போன்ற எத்தனையோ தலை சிறந்த இசை மேதைகளை மேற்கத்திய இசை உலகம் இன்றும் வியந்து தான் பார்க்கிறது என்பது உண்மை. ஒவ்வொரு ஊரின் பருவ  நிலையை சார்ந்து தான் அங்கிருக்கும் உணவு முறையும், வாழ் நிலை பண்ப்பாடுகளும் அமைந்துள்ளது. இதில் இருந்து தான் அவர்களின் கலை வடிவங்களும், இலக்கிய வடிவங்களும் உருவம் பெற்று முழுமை பெற்றது. .

                               இந்திய இசை நமது ஆயிரக்கணக்கான இயல் வாழ்க்கை தன்மையிலிருந்து  வெளிப்பட்டது தான். சினிமா என்ற ஒரு அதி சக்தி வாய்ந்த ஊடகம் வழியாக இசை வெளிப் படத்   துவங்கியது  முதல் இசையின் தனி ஆளுமை குறைய தொடங்கியது. ஆனால் மற்ற நாடுகளில் இப்படி ஒரு நிலை இல்லை. அங்கு எப்போதும் இசையின் ஆளுமை தனித்துவம் பெற்று நிற்கிறது. , இதனால் பொருளாதார ரீதியில் அங்கிருக்கும் இசை விஞ்ஞானிகளுக்கு தகுந்த இடம் இருந்து கொண்டே வருவதில் ஆச்சரியமில்லை  .

                              இங்கு சினிமா அனைத்து கலையின் வடிவம் என்ற ஒரு போலித்தனத்தில் வலிமைப் பெற்று வளர தொடங்கியதும் இசையில் புதுமைகள் என்ற ஒரு பேச்சுக்கே இடமில்லாமல் போனது. மட்டுமல்ல பிற நாட்டு இசையின் ஆதிக்கங்களும் நம்மை குழப்பி விட்டது என்று சொல்வது தான் சரியாக இருக்கும். 

                             இங்கு மேல் நாட்டு இசை வடிவத்தில் நம்மூர் உணர்வுகளை அதிகமான சப்த கோஷங்களால் பாடப்படுவது அல்லது அதிகமான இசைக்கருவிகளால் இசைப்பது தான் இந்திய இசையின் புதுமைகள் என்று யாரவது கூறினால் அவரிடம் பரிதாபப்படுவதே சரியானது என்று நான் நினைக்கிறேன். மேற்கத்திய வாழ்க்கையை சர்வசாதாரணமாக அனுகரித்து வாழ்ந்து பழகி விட்டவர்களால் அப்படி மட்டுமே சிந்திக்க முடியும் என்பதும் ஒரு பச்சை பரமார்த்தம் தான். 

                             திரு. இளைய ராஜா யார் யாருக்கு எழுதுவது  என்ற அவரது புத்தகத்தில் .ஜான்ஸ்காட் என்ற அமெரிக்க கம்போசருடன் ,(இவர் இளைய ராஜாவின் லண்டன் ராயல் பில்ஹார்மானி இசைக்குழு இசைபதிவை இயக்கியவராவர் ) நடத்திய உரையாடலை பதிவு செய்திருக்கிறார். அதில் ஜான்ஸ்காட் , இந்திய சினிமாவில் பாடலுக்கென்று உருவாகும் சூழல்கள் எப்படிப் பட்டவை என்று கேட்கிறார். . அதற்கு திரு. இளைய ராஜ தாலாட்டு முதல் ஒப்பாரி வரைக்குமான மனிதனின் அனைத்து உணர்ச்சிகளுக்கும் பாடல் தேவைபடுகிறது என்று சொல்கிறார். இத்தனை வித்தியாசமான சூழ்ல்களா என்று வியக்கிறார் ஜான்ஸ்காட் ,அதற்கு திரு. இளைய ராஜா கூறியது இப்படி ,

" ஆனால் பாடலின் பாணியோ எந்தத் தனித்தன்மையும் அற்று திரும்பத்   திரும்ப ஒரே மாதிரியான அமைப்பைத்தான் டைரக்டர்கள்  வற்புறுத்துகிறார்கள் என்பதற்கும் அதிசயித்தார். " 

அதில் திரு .இளையராஜா இப்படி தொடர்கிறார் 

" திரைப்படங்களில் நீங்கள் வாசித்தபோது உற்சாகமாக இருந்ததா? போரடித்ததா? என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் வேறு வேறு இசையை என் முனனால் வைத்ததனால் அது எனக்குத் தொல்லையாக இல்லை என்றார்"
 . 
"ஆனால் ,இங்கே எனக்கு அப்படி இல்லையே ஒவ்வொரு படத்திலும் முந்தைய படத்தில் ஹிட் ஆன பாடலைப் போலவே வேண்டுமென்று ஒரே மாதிரியான சூழ்நிலையே கொடுக்கப் படுவதனால் என் சிந்தனையைத் தூண்டி, நானாக அதற்குச் செய்யவேண்டியது ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. "

"அவர்கள் போடும் ஒரே வட்டத்திற்குள்ளே தான் நான் சுற்ற வேண்டியதாக இருக்கிறது .
அதுவும் வேறு வேறு வடிவமான வட்டமாக் இல்லையே "

                        திரைப்படங்கள் எப்படி நம் அறிவியல் ரீதியான இயல்பான இசையுடன் முரண்ப்பட்டுகொள்கிறது என்பது வேடிக்கையாக இருக்கிறது . இங்கு யாரை யார் குறை சொல்வது. 


                       துவா பாடகர்கள் ( சைபீரியாவின் தென்பகுதி நாடு துவா ) தங்கள் குரலிலேயே பல ஒலிகளை ஒரே நேரத்தில் சுருதி சேர்த்து பாட கூடிய அதிசய பாடகர்கள். கடந்த வருடம் கொல்ககொத்தாவில் ஒரு கிராமத்தில் துவா பாடகர்கள் எங்களை வியக்க செய்தார்கள். இயற்கையின் பல ஒலிகளும் அவர்களது தொண்டை வழியாக எளிதாக ஒலித்தது ஆச்சரியத்தை தந்தது 

                       நம்மூரில் சினிமாவில் இசை அமைப்பவர்களுக்கு இசை கருவி என்றால் முக்கியமாக மேலை நாட்டு இசை கருவிகள் தான். தாளம் ராகம் எல்லாமே அதை சார்ந்து உருவாகும் நிலை .

                      (தொடரும் ...............)

1 கருத்து: